Tuesday, September 25, 2007

பெண்களின் கவனத்திற்கு...




'Eve teasing' போய் தற்போது 'Adam teasing' துளிர் விட ஆரம்பித்து விட்ட போதிலும், இந்த 'eve teasing' க்கு காரணம் விடலை பருவ இளைஞனின் பருவ கோளாறா? , அவனது துணிச்சலா? , அவனது வெறித்தனமான செயலா?, அவனது சோம்பேறிதனமான பொழுதுப்போக்கா?? என்று ஆராய்ந்துப் பார்க்கும் போது, இவை மட்டும் காரணமல்ல, பெண்களின் நடத்தையும், உடை அலங்காரமும் தான் என்று பெண்களே பலர் ஒத்துக் கொள்வர்.







ஒரு நிமிட பார்வையிலேயே ஹார்மோன்களின் உந்துதலினால் ஒரு ஆண் கிளிர்ச்சியடையும் போது, பெண்கள் தங்கள் அங்கங்களை வெளிப்படுத்தும்வண்ணம் உடை அணிவது சரியானதா???


வேதத்தில் இதற்கான ஆலோசனை என்ன என்றுப் பார்ப்போம்.

நீதிமொழிகள் 31: 25 ல் வேதம் சொல்கிறது குணசாலியான ஒரு பெண்ணின் உடை 'பலமும் அலங்காரமுமாயிருக்கிறது' என்று.

அலங்கரித்துக் கொள்வது தவறில்லை, ஆனால் அது மற்றவரின், குறிப்பாக ஆண்களை திசை திருப்ப கூடிய வண்ணம் இருத்தல் கூடாது.


இன்றைய பெண்களின் நவநாகரீக உடைகள் அணிவதில் அதிக கவணம் தேவை. இறுக்கமான t-shirt, low hip Jeans, deep neck tops, போடுவதை தவிறுங்கள் பெண்களே.


நம் பண்பாட்டு உடையான சேலையையும் அழகாக, அங்கங்கள் தெரியாவண்ணம் அணிய வேண்டும்.


பவுல் பெண்களின் அழியாத அலங்காரமாக ' சாந்தமும் அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்' என்று Iபேதுரு 3: 4 ல் குறிப்பிடுகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து கல்லூரியில் படிப்பதும், உடன் சேர்ந்து அலுவலகத்தில் வேலை செய்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆண்களுடன் பழகுவதிலும் ஒரு பெண்ணுக்கு வரைமுறை தெரிந்திருப்பது அவசியம்.



கண்டிப்பா ஆண்களோட ஒரு லிமிட்டோட தான் பழகணும். இயற்கையாவே ஆப்போஸிட் செக்ஸ் கிட்ட இருக்கற அட்ராக்ஷன் என்ன தான் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும் கொஞ்சமாவது இருக்க தான் இருக்கும். ஒரு பெண் ஒரு பையனை காஷூவலா தொட்டாலும், அவனுக்கு அது சில உணர்ச்சிகளை தூண்டி விடலாம். அது மாதிரி ஒரு பையன் சாதாரணமா ஒரு பெண்ணை அழகா இருக்கான்னு சொன்னா கூட அவளுக்கு அது ஒரு மயக்கத்த தரலாம் .

அதனால் ஆண் பெண் நட்பிலும் கவணம் தேவை பெண்களே!

பொது இடங்களில் தேவையில்லாமல் உரக்க பேசுவது, சத்தமாக சிரிப்பது போன்றவற்றை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.



கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன்......

பொருத்தமான சிகையலங்காரம்

பண்பான உடையலங்காரம்

அடக்கமான நடைபாவனை

அமைதலான பேச்சுத்தன்மை



அத்தனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தன்னை காத்துக்கொள்ளும் பெண் நிச்சயம் பூவுலகிலும் விண்ணுலகிலும் புகழப்படுவாள்!!!



ஜெபம்:





கர்த்தாவே வஞ்சனையுள்ள சவுந்தரியத்தை நம்பாமல், வீணான அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உமக்கு பயப்படும் பயத்தோடுக் கூடிய குணசாலியான பெண்ணாக என்னை காத்துக்கொள்ளும்.