Wednesday, January 30, 2008

நன்றியுணர்வு..



நன்றிகெட்ட உலகில் வாழும் நாம் கடவுளுக்கும் மனிதருக்கும் நன்றியுள்ளவர்களாயிருக்க நம்மை எப்பொழுதும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

நன்றியுணர்வு இருக்கத்தான் செய்கிறது என்று இராமல், சொல்லாலும் செயலாலும் பாராட்டுதலுடன் அதை வெளிக்காட்ட வேண்டும். பிறருக்கு நன்றிகூறமுடியாதபடி நமது தொண்டையை அடைப்பது பெருமையே.சிறுவயது முதல் நமக்குதவியவர்களின் பட்டியலொன்றைத் தயாரித்து வைத்துக்கொண்டால் பிறந்த நாட்கள், மறுபடி பிறந்த நாட்கள் மற்றும் நிறைவு விழாக்களின்போது அன்னாருக்குத் தகுந்த வாழ்த்துக்கள் அனுப்பப் பேருதவியாகயிருக்கும்.