Sunday, February 24, 2008

சோதனைகளை ஜெயிக்கலாம....வேத வசனம் கொண்டு!!

சோதனை வருவது பாவமல்ல: அதில் விழுவதுதான் பாவம்.
விழுந்தவுடன் பிறர்மீது குற்றஞ்சாட்டி, ஏதோவொன்றின் மீது பழி சுமத்துவது இயல்பு. ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் வந்த சோதனைகளை அவர்கள் எவ்விதம் சந்தித்தனர் என ஆராய்வது நடைமுறையில் பல படிப்பினைகளை நமக்குத் தரும்.

அறியாமை:

ஆதாம் ஏவாளுக்கு தேவ கட்டளை மிகவும் தெளிவானது.
அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. அது எளியது குறிப்பானது.[ஆதி 2:16,17]: என்றாலும் தவறினர்.

ஆனால், கல்லை அப்பமாக்ககூடாதென்றோ, கோபுரத்திலிருந்து குதிக்கக் கூடாதென்றோ பிதாவானவர் இயேசுவுக்குச் சொல்லியிருந்ததாகத் தகவல் இல்லை.
அப்படியானால் இக்காரியங்களைச் செய்யத் தூண்டிய பிசாசை இயேசு வென்றது எவ்வாறு?

அவர் திருவசனத்தின் "தத்துவங்கள்' முலம் செயல்பட்டார்.
அவர் தேவ நோக்கத்தை தெளிவாக புரிந்திருந்தபடியால் தேவத் திட்டங்களைச் சிதறடிக்கச் சத்துரு விரிக்கும் வலையை எளிதாய் அடையாளங் கண்டுக்கொண்டார்.

கல்லுகளை அப்பமாக்க வந்த முதல் சோதனையில் அவரது குமாரத்துவத்திற்கும், வசனத்தின் குறைவின்மைக்கும் சவால் வந்தது.
மேலிருந்து குதிக்கச் சொன்ன இரண்டாம் சோதனையில் பகட்டுக்கும், கடவுளை பரீட்ச்சிக்கவும் அழைப்பு வந்தது.
மூன்றாவது சோதனையில் மேனமைக்குக் குறுக்கு வழியைப் பிசாசு சொலிக்கொண்டிருந்தான்.

"ஐயோ எனக்குத் தெரியாது; என்வே தான் விழுந்தேன்" என்று ஒருநாளும் சொல்ல வேண்டாம். தேவன் தமது சத்தியத்தை நமது இருதயங்களில் வைத்துள்ளார். போதுமான வேதாகமத்தை கையில் தந்துள்ளார்.
மட்டுமல்ல, நம்மிலிருக்கும் ஆவியானவர் எதை ஏற்கவேண்டும், எதை எதிர்க்க வேண்டுமென போதித்தவண்ணமிருக்கிறார். ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு கட்டளை தேவையில்லை.

அடுத்தவர்:

'விலக்கிய கனியைப் புசித்தாயோவென தேவன் ஆதாமைக் கேட்டபோது அவன் பழியைத் தன் மனைவியின்மூது போட்டுவிட்டான்[ஆதி 3:12]

இயேசுவுக்கு மிக வலுவான சோதனையொன்று பேதுரு மூலம் வந்தது.
எருசலேமில் தாம் எவ்விதமாய் பாடு பட்டுக் கொல்லபடுவாரென்று இயேசு முன்னரிவித்துக்கொண்டிருக்கையில், பேதுரு" ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே" என்று அவரைக் கடிந்துக்கொண்டான்.
சிலிவையைத் தவிர்க்க சத்துருவின் தந்திரத்தை இதில் அடையாளங்கண்டு கொண்ட இயேசு பேதுருவை நோக்கி," எனக்கு பின்னாகப்போ, சாத்தானே!" என்றார்[ மத் 16: 21-23]
தமக்கு மிகவும் நெருங்கியதொரு சீடன் சொன்னான் என்பதால் இயேசு அவன் கூறியதை மதிக்கவில்லை.

ஏவாள் அந்த பழத்தை ஆதாமிடம் கொடுக்கையில் இதைத்தான் அவன் செய்திருக்க
வேண்டும்," அப்பாலே போ சாத்தானே" என்று சொல்ல வேண்டியவன்,
" அருகில் வா , சாமந்தியே" என்றானோ????

நாம் உயிருக்குயிராய் நேசிப்பிவர்களிடமிருந்தும் நமக்கு சோதனை வரலாம்.சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்தும் சோதனை நம்மைச் சந்திக்கலாம்.

" என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே" [நீதி 1:10]