Sunday, January 13, 2008

கலப்புத் திருமணம்



"யூதர் என்றும் கிரேக்கர் என்றும் இல்லை:
அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை.
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள்" ( கல 3:28 )






இன்று பல கலப்புத் திருமணங்கள் நம் நாட்டில் நடைபெறுகின்றன. இதைத் தீவரமாய் ஆதரிக்கும் பலருண்டு: அதே போல் எதிர்க்கும் பழமைவாதிகளும் உண்டு பைபிளில் இதற்குப் பதிலுண்டா?

நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ வேதாகமம் ஒருபோதும் மாற்றுக்கலாச்சாரத் திருமணங்களுக்கு எதிராய்ப் பேசுகிறதில்லை.

விசுவாசிகள் அவிசுவாசிகளை மணப்பதை மட்டுமே அது எதிர்க்கிறது ( 2 கொரி 6:14,15 ).

ஈசாக்குக்குக் கானானியரிடத்தில் பெண்கொள்ள வேண்டாமென ஆபிரகாம் கூறியது மாற்றுக்கலாச்சாரத் திருமணத்திற்கு எதிர்ப்பாயல்ல: தன்னை எந்நாட்டிலிருந்து கடவுள் வேறுபிரித்தாரோ, அந்நாட்டிற்குத் தனது மகன் திரும்பச் செல்லக்கூடாது என்பதற்காகவே.
கலப்பு மணம் செய்த மோசேக்கு எதிராய்ப் பேசிய மிரியாம்மீது கடவுள் சினங்கொண்டார் ( எண் 12:1,9 ).

யோசேப்பின் மனைவி எபிரெயப் பெண்ணல்ல ( ஆதி 41:45 ).
வேற்று நாட்டவரை மணமுடித்தால் பிள்ளைகளுக்குத் தாங்கள் எதைச் சேர்ந்தவர்களென்று குழப்பம்!


வேற்று மொழியினரென்றால் பொதுவானதொரு மொழியில் இருவரும் தேர்ந்திரிந்தாலொழிய நெஞ்சோடு நெஞ்சு பேசமுடியாது!
ஆகவே இதில் நடைமுறை ஞானம் வேண்டும்.

எல்லா காரியங்களும் பொருத்தமாயிருந்து, இருவரும் விசிவாசிகளாய் இருக்கும் பட்சத்தில், சாதி வித்தியாசம் என்ற ஒரே காரணத்தால் பெண்ணையோ மாப்பிள்ளையையோ வேண்டாமென்று சொல்வது கடவுளுக்கு பிரியமாயிருக்காது.