Friday, September 21, 2007

என் அன்பு தந்தைக்குச் சமர்பணம்.

அன்புள்ள அப்பா!


குழந்தை பருவத்தில்.....




கரம் பிடித்து நடக்க

கற்றுத் தந்து-



பள்ளி பருவத்தில்.....

மிதிவண்டி ஓட்ட

கற்றுத் தந்து-


கல்லூரி பருவத்தில்.....
அயல் நாட்டில் வாழ உயர்கல்வி
கற்றுத் தந்த நீங்கள்.............................



இன்று..

உங்கள் இழப்பினை தாங்கும் மனவழிமையினை

கற்றுத் தராதது ஏன்?

தனிமையில் கண்ணீர் கடலில் நீந்தி கரைசேர
கற்றுத் தராதது ஏன்??

என் சோகத்தை மறைத்து புன்முறுவல் புரிய
கற்றுத் தராதது ஏன்???




கேள்விகள், ஏக்கங்களுடன், உங்களை விண்ணுலகில் காணும்
நாளுக்காக காத்திருக்கும்
உங்கள் செல்ல மகள்!