Tuesday, September 25, 2007

பெண்களின் கவனத்திற்கு...




'Eve teasing' போய் தற்போது 'Adam teasing' துளிர் விட ஆரம்பித்து விட்ட போதிலும், இந்த 'eve teasing' க்கு காரணம் விடலை பருவ இளைஞனின் பருவ கோளாறா? , அவனது துணிச்சலா? , அவனது வெறித்தனமான செயலா?, அவனது சோம்பேறிதனமான பொழுதுப்போக்கா?? என்று ஆராய்ந்துப் பார்க்கும் போது, இவை மட்டும் காரணமல்ல, பெண்களின் நடத்தையும், உடை அலங்காரமும் தான் என்று பெண்களே பலர் ஒத்துக் கொள்வர்.







ஒரு நிமிட பார்வையிலேயே ஹார்மோன்களின் உந்துதலினால் ஒரு ஆண் கிளிர்ச்சியடையும் போது, பெண்கள் தங்கள் அங்கங்களை வெளிப்படுத்தும்வண்ணம் உடை அணிவது சரியானதா???


வேதத்தில் இதற்கான ஆலோசனை என்ன என்றுப் பார்ப்போம்.

நீதிமொழிகள் 31: 25 ல் வேதம் சொல்கிறது குணசாலியான ஒரு பெண்ணின் உடை 'பலமும் அலங்காரமுமாயிருக்கிறது' என்று.

அலங்கரித்துக் கொள்வது தவறில்லை, ஆனால் அது மற்றவரின், குறிப்பாக ஆண்களை திசை திருப்ப கூடிய வண்ணம் இருத்தல் கூடாது.


இன்றைய பெண்களின் நவநாகரீக உடைகள் அணிவதில் அதிக கவணம் தேவை. இறுக்கமான t-shirt, low hip Jeans, deep neck tops, போடுவதை தவிறுங்கள் பெண்களே.


நம் பண்பாட்டு உடையான சேலையையும் அழகாக, அங்கங்கள் தெரியாவண்ணம் அணிய வேண்டும்.


பவுல் பெண்களின் அழியாத அலங்காரமாக ' சாந்தமும் அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்' என்று Iபேதுரு 3: 4 ல் குறிப்பிடுகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து கல்லூரியில் படிப்பதும், உடன் சேர்ந்து அலுவலகத்தில் வேலை செய்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆண்களுடன் பழகுவதிலும் ஒரு பெண்ணுக்கு வரைமுறை தெரிந்திருப்பது அவசியம்.



கண்டிப்பா ஆண்களோட ஒரு லிமிட்டோட தான் பழகணும். இயற்கையாவே ஆப்போஸிட் செக்ஸ் கிட்ட இருக்கற அட்ராக்ஷன் என்ன தான் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும் கொஞ்சமாவது இருக்க தான் இருக்கும். ஒரு பெண் ஒரு பையனை காஷூவலா தொட்டாலும், அவனுக்கு அது சில உணர்ச்சிகளை தூண்டி விடலாம். அது மாதிரி ஒரு பையன் சாதாரணமா ஒரு பெண்ணை அழகா இருக்கான்னு சொன்னா கூட அவளுக்கு அது ஒரு மயக்கத்த தரலாம் .

அதனால் ஆண் பெண் நட்பிலும் கவணம் தேவை பெண்களே!

பொது இடங்களில் தேவையில்லாமல் உரக்க பேசுவது, சத்தமாக சிரிப்பது போன்றவற்றை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.



கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன்......

பொருத்தமான சிகையலங்காரம்

பண்பான உடையலங்காரம்

அடக்கமான நடைபாவனை

அமைதலான பேச்சுத்தன்மை



அத்தனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தன்னை காத்துக்கொள்ளும் பெண் நிச்சயம் பூவுலகிலும் விண்ணுலகிலும் புகழப்படுவாள்!!!



ஜெபம்:





கர்த்தாவே வஞ்சனையுள்ள சவுந்தரியத்தை நம்பாமல், வீணான அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உமக்கு பயப்படும் பயத்தோடுக் கூடிய குணசாலியான பெண்ணாக என்னை காத்துக்கொள்ளும்.

Monday, September 24, 2007

நான் ரசித்த பாடல்.........கேட்டுப்பாருங்க!




FMPB யின் 'ரிஷியா' பாடல்கள் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.........




இந்த பாடல் உங்கள் மனதையும் தொடும் என நம்புகிறேன்!!




இந்த ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்டு மகிழ........

Tamil Christian Songs - Hai Vol.1 - Enggum Olli

நான் ரசித்த பாடல்......பார்த்து ரசியுங்கள்!

இளமை, இனிமை, இறைவனுக்கே!

நீ உன் வாலிப பருவத்தில் உன் சிருஷ்டிகரை நினை' -பிரசங்கி 12:1



இளம் பருவத்தில் வாலிபர்களை இறைவனிடமிருந்து திசைதிருப்ப சாத்தான் எத்தனையோ ஆயுதங்களை பயன் படுத்துகிறான். அவன் உபயோகிக்கும் யுக்திகளில் இன்று பிரதானமானவை internet ம், சினிமா/தொலைக்காட்சி கேளிக்கைகளும், இரவு விடுதிகளின் களியாட்டங்களும் தான்.

வாலிப பருவத்தில் இயற்க்கையாகவே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்கள் நடைபெறும் போது, மேற்சொல்லிய காரியங்கள் எளிதாக வாலிபர்களை தவறு செய்ய தள்ளிவிடுகிறது.


இதனை மேற்கொள்வது எப்படி?

மேற்கொள்வது கஷ்டம்தான்,ஆனால் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே! கர்த்தரின் துணையோடு, வேதவசனங்களின் வழிநடத்துதலோடு எவ்வாறு இச்சோதனைகளை மேற்கொள்ளலாம் என பார்க்கலாமா.......

'வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதனால்தானே!'

சங்கீதம் 119:9


1. எத்தகைய நண்பர்களுடன் நீங்கள் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது தவறல்ல,ஆனால் அதிலும் உங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொல்வது அவசியம்.



'உமக்குப் பயந்து உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழ்ன்'


சங்கீதம் 119:63



ஆகாத சம்பாஷனை நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் கொள்க!



2.சோம்பேறிதனம் உங்களை எளிதில் பாவம் செய்ய தூண்டிவிடும், சோம்பேறியின் மூளையை சாத்தான் சீக்கிரமாக ஆக்கிரமித்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

'சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொள்ளும்' - நீதிமொழிகள் 21:25


இசைப் பயிற்ச்சி, விளையாட்டுப் பயிற்ச்சி போன்றவை உங்களை குதூகலத்துடனும், உற்ச்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.

சோம்பேறித்தனம் தாவீது ராஜாவை எவ்வளவு பெரிய பாவம் செய்ய தூண்டியது பாருங்கள்![II சாமுவேல் 11.2-4]





3.நீங்கள் இன்டர்னெட்டில், தொலைக்காட்ச்சியில் பார்க்கும் காட்ச்சிகளை, இயேசப்பாவும் உங்களோடு சேர்ந்துப் பார்த்து ரசிப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சி உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிரானது அல்ல என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.



'தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன், வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.' - சங்கீதம் 101:3



ஒரு ஆபாச காட்ச்சியையோ, வன்முறை நிகழ்ச்சியையோ நிச்சயம் இயேசப்பா உங்களுடன் சேர்ந்து ரசிக்கமாட்டார் என்பது தெள்ளந்தெளிவாக உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா???


'வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பகட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட;

ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.' - பிரசங்கி 11:9


ஜெபம்:



"அன்புள்ள இயேசப்பா! என் இளமையைக்குறித்து ஒருவனும் என்னை அசட்டைபண்ணாதபடிக்கு, என் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க கற்றுத்தாரும்"

ஆமேன்.



பாடல்:
http://www.tamilchristiansongs.org/media/index.php?option=com_zina&Itemid=26&l=8&p=Fmpb_Songs/Rizia/Chumma.wma&m=1

Friday, September 21, 2007

என் அன்பு தந்தைக்குச் சமர்பணம்.

அன்புள்ள அப்பா!


குழந்தை பருவத்தில்.....




கரம் பிடித்து நடக்க

கற்றுத் தந்து-



பள்ளி பருவத்தில்.....

மிதிவண்டி ஓட்ட

கற்றுத் தந்து-


கல்லூரி பருவத்தில்.....
அயல் நாட்டில் வாழ உயர்கல்வி
கற்றுத் தந்த நீங்கள்.............................



இன்று..

உங்கள் இழப்பினை தாங்கும் மனவழிமையினை

கற்றுத் தராதது ஏன்?

தனிமையில் கண்ணீர் கடலில் நீந்தி கரைசேர
கற்றுத் தராதது ஏன்??

என் சோகத்தை மறைத்து புன்முறுவல் புரிய
கற்றுத் தராதது ஏன்???




கேள்விகள், ஏக்கங்களுடன், உங்களை விண்ணுலகில் காணும்
நாளுக்காக காத்திருக்கும்
உங்கள் செல்ல மகள்!