Monday, October 29, 2007

காலை ஜெபம்




கர்த்தர் கிருபையாக நமக்கு தரும் ஒவ்வொரு நாளிலும், அதிகாலையில் அந்த நாளுக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்த ஜெபத்தை ஜெபித்துப் பாருங்கள், எனக்கு ஆசீர்வாதமாக இம்மட்டும் இருக்கும் ஜெபம் இது...............



அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன்,
நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு எனனைத் தப்புவியும்;
உம்மை புகழிடமாகக் கொள்ளுகிறேன்.
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்;
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

ஆமேன்