Tuesday, February 12, 2008

மனம்போன போக்கிலே...


சொந்த விருப்பத்தின்படி வாழ்வதையே பொதுவாக நாம் விடுதலை வாழ்வு என்று எண்ணுகிறோம். ஆனால் " நமக்குச் சரியாக தோன்றுவது முடிவில் சாவுக்கு நடத்தும் பாதையாகிடும்" என்று நீதிமொழிகள் 14:12இல் சாலோமோன் ஞானி கூறுகின்றார்.


நாம் அறிந்தோ அறியாமலோ நம் ஜெபங்களில் தேவ சித்தத்தின் 'சத்தத்தை' விட நமது விருப்பத்திற்கான 'சம்மதத்தையே' நாடுகிறோம்.
ஜெபத்தில் நமது விருப்பங்களை ஒவ்வித்தவுடன் நமக்கு புனித ஒப்புதல் கிடைத்துவிட்டதென நாமே திட்டங்களை செயல்படுத்தப் பெருமையடித்துக்கொண்டு புறப்படுவிடுகிறோம்.


ஆண்டவருக்குச் சித்தமானால்தான் உயிரோடே இருப்போம்.
அப்படியிருந்தால்தான் எதையும் செய்யமுடியும்.இவ்வித பயபக்தி அவசியம்.

பல சந்தர்ப்பங்களீல் நம் கனவுகளும் இலக்குகளுமே நம்க்கு விக்கிரகங்களாகிவிடுகின்றன. அந்த விக்கிரகங்களை அடையாவிட்டால் வாழ்வே சூன்யமாகிவிட்டது என்ற நிலைக்குக்கூட வந்துவிடுகிறோம். அச்சமயங்களில் தேவனது 'பரிபூரண' சித்தத்தைத் தவறவிட்டு அவரது 'அனுமதிச்; சித்ததிலேயே அமர்ந்துவிடுகிறோம்.

கடவுளின் கண்பார்வையைப் புரிந்துகொண்டு அதின்படி நடப்போர் பாக்கியவான்கள் (சங் 32:9).
தனித்து இயங்குவதற்கு தம்மிடம் வல்லமையையும் அதிகாரத்தையும் கிறிஸ்து வைத்திருந்தாலும், அவைகளை தாமாகவே களைந்துவிட்டு ,"தேவனே உமது சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன்" என்று தம்மை அர்ப்பணித்துக்கோண்டதால் இப்பூவுலக வாழ்வில் ஒருபோதும் தமது பிதவின் சித்தம் நிறைவேற்ற அவர் தவறவில்லை (எபி 10:7,9)




என் இஷ்டப்படி நடந்தேன்,ஐயோ; முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்!