Thursday, December 6, 2007

விசுவாசம்




என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனின் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் ( யோ 7:38)


நம்மிலுள்ள விசுவாசத்தை நாம் பகிர்ந்துக்கொள்ளும்படி கடவுள் விரும்புகிறார். அவ்வாறு பகிர்ந்துக்கொள்ளுதல் நமது விசிவாசத்தை பெருகச் செய்யும்."எவன் தன்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதி 11:25)
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்களின் விசுவாச பகிந்துக்கொள்ளுதலை பார்ப்போம்.


பர்னபா:
-------------
"அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலிம் நிறந்தவனுமாயிருந்தான்.அநேக மக்கள் ஆண்டவரிடம் சேர்க்கப்பட்டார்கள்" (அப் 11:24).
விசுவாசத்தில் வல்லவனாகிய பர்னபா தன் விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொண்டதின் மூலம் கணக்கற்ற மக்கள் விசுவாசத்தைப் பெற்றவர்களாய் திருச்சபையில் இணைய முடிந்தது.


பவுல்:
----------
விசுவாசத்தை பகிர்ந்துக்கொள்ள பேச்சுத்திறன் அவசியமில்லை. தெளிவாக எளிய நடையில் சொன்னால் போதும். அதிகம் படித்தவராயிருந்தாலும் பவுல் தனது அறிவிலும் திறமையிலும் ஒருநாளும் நம்பிக்கை வைக்கவில்லை. திருவசனத்தின் வல்லமையையே அவன் எப்பொழுதும் நம்பினான்.அதுவே அவரது வெற்றி நிறைந்த திருபணியின் இரகசியமாகும் (1 கொரி 2:1-5).


திமிர்வாதக்கரனின் நண்பர்கள்:
--------------------------------------------------------
"படுக்கையில் கிடந்த முடக்குவாதமுற்றவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர் அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, முடக்குவாதக்கரனை நோக்கி:"மகனே தைரியமாயிரு:உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன: என்றார்.(மத் 9:2)
நான்கு பேர் தங்கள் விசுவாசத்தைத் திமிர்வாதக்காரன் ஒருவனோடு பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் தங்கள் செயலில் அதைக் காட்டினர். இயேசு அவர்களது விசுவாசத்தைக்கண்டு மனம் மகிழ்ந்தார். அவர்கள் விசுவாசத்தில் இன்னும் வளரும்படி, திமிர்வாதக்கரனைச் சுகமக்கினார்.


அம்மா, பாட்டியின் விசுவாசம்:
-------------------------------------------------------
"அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்,உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்:(2 தீமோ 1:5).
இவை தீமொத்தேயுவிற்க்கு பவுல் எழுதியது. பெண்களை உற்ச்சாகமூட்டும் வசன்ம் இது! வெளியே போய் பிரசங்கிக்க முடியாவிட்டாலும், வீட்டில்தானே விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொள்ள வழியிருக்கிறதே! நாம் கடவுள் மீதுல்ள விசுவாசத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளபோது, அது கடவுளைக் கன்படுத்துகிறது: பகிந்துக்கொள்ளும் நபரைக் கடவுள் கன்ப்படுத்துகிறார். எனவேதான் வேதத்தில் தீமோத்தேயுவின் பாட்டி, மற்றும் தாயாரின் பெயரும் வந்துவிட்டது!


இறைக்க இறைக்க ஊறும் ஊற்று;
சொல்லச் சொல்ல வளரும் விசுவாசம்!

அதிகாரத்திற்க்கு கீழ்படிதல்!!!



அதிகாரிகளுக்கு கீழ்படிதல், கடவுளுக்கு கீழ்படிதலாம். நாட்டின்


சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.



இனி வருமானவரி செலுத்த தவறமாட்டோம்:
சுங்கவரி அதிகாரிகளை ஏய்க்கமாட்டோம்:
எவருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம்:
சாலை விதிகளை மீறமாட்டோம்:
இப்படி நாம் அனைவரும் உறுதிக்கொண்டால் உலகமே மாறிவிடுமே!



நாம்தான் உலகிற்கு உப்பு:
நமது உப்புத்தன்மை குறைந்துப்போனால் உலகம் கெட்டுப் பயனற்றுப்போகுமே.
நாம்தான் உலகிற்கு விளக்கு:
நமது பிரகாசம் மங்கிப்போனால் உலகம் இருண்டு படுகுழியில் இறங்குமே.(மத்:13,14)



நாட்டின் சட்டம் நற்செய்தியறிவிப்பைத் தடுத்தாலோ, இன்னொரு மதத்தை நம்மீது திணித்தாலோ அதற்குக் கீழ்படிய நாம் கடமைப்பட்டவ்ர்களல்ல (தானி 3:16)



நாம் வேலைசெய்யும் இடங்களிலுள்ள மேலதிகாரிகளுக்கும் முழுமனதோடு கீழ்ப்படியவேண்டும். " வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல,உங்கள் தலைவர்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடு கீழ்படிந்து , மனிதருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாய்ப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின் பணியாளராய் மனபூர்வமாய் கடவுளுடைய திருவுளத்தின்படிச் செய்யுங்கள்...மனிதருக்காக அல்ல, கடவுளுக்காகவே நல்மனதோடு வேலை செய்யுங்கள்" (எபே 6:5-8) நமது அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவது, கிறிஸ்துவைச் சேவிப்பதாம் (கொலோ 3:22-24)



மேலதிகாரிகளில் " நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல: முரட்டுக் குணமுள்ளவர்களுக்கும்" நாம் கீழ்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம் ( 1 பேது 2:18).



கடவுளுக்குக் கீழ்படிகிறேனென்று சொல்லியும் அதிகாரிகளுக்குக்
கீழ்ப்படியாதவன் வீணன்: கண்ணியம் அவனிடத்தில் இல்லை.