Tuesday, November 13, 2007

மேன்மைக்கு முன்னானது தாழ்மை!



உலகில் பலருக்கும் தாங்கள் மற்றவர்களைவிடல் பெரியவர்களாக - முக்கியமாணவர்களாக-தலைவர்களாக-உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவா உண்டு. இயேசுவின் சீடர்களும் இதற்கு விதிவிலகல்ல. ஒருமுறை அவர்களில் எவன் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.[லூக்கா 22:24]


இயேசு அவர்களிடம் ," உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கட்டும்" என்றார் [லூக்கா 22:26]சிலுவையின் மரணம் வரை தம்மைத்தாமே தாழ்த்தினவரல்லவா நம் இயேசு?[பிலி 2:8] நாமும் கனம்பண்ணுகிறதிலே ஒருவருகொருவர் முந்திக்கொண்டு, மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் பெரியவர்களாக எண்ணுவோம் [ரோ 12:10;பிலி 2:3] எந்த வேலையும் நமது தகுதிக்கு குறைந்தது என்று எண்ணக்கூடாது. நமதாண்டவர் தம் சீடர்களின் கால்களையே கழுவித் துடைத்தாரல்லவா?[யோ 13:5]


இன்னும் அநேகருக்கு தங்களுடைய கல்வி, செல்வாக்கு, தோற்றம், சபைப்பிரிவு மற்றும் சாதி முதிலியவற்றைப்பற்றியெல்லாம் பெருமை." மனிதருக்குள்ளெ மேன்மையாக எண்ணப்படுவது கடவுளுக்கு முன்பாக அருவருப்பு [லூக்கா 16:15 இ]. நாம் இறக்கும்போது இவை எதுவும் நம்மோடுகூட வருவதில்லை. இவ்வுலக மேன்மையெல்லாம் குப்பை.இதையறிந்த பவுல் ," கிறிஸ்த்துவுக்காய் நான் எல்லாவற்றையும் இழப்பென்று விட்டேன்; குப்பையென்றே எண்ணுகிறேன்" என்றார் [ பிலி 3.11]


தூய்மையாய் வாழ்வதும் தங்கள் சாமர்த்தியமென எண்ணிக்கொண்டிருப்போரும் உண்டு. தன் பக்தியைக் குறித்து தம்பட்டம் அடித்துகொண்ட பரிசேயனின் ஜெபத்தை கர்த்தர் புறகணித்தார்.


நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கட்டும் [1 கொரி 10:12]
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது [ மத் 5:3]
மேனமைக்கு முன்னானது தாழ்மை[ நீதி 15:33 ஆ]


{ ஆர்.ஸ்டான்லி அவர்களின் 'நாளொரு மேனி என்ற தின தியான பகுதியிலிருந்து எழுதியது}