Wednesday, October 3, 2007

திருமணம் எங்கு நிச்சயக்கப்படுகிறது....




திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப் படுகிறது என கூறுவதை கேட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் என்னவெனில் ' இவனுக்கு இவள் வாழ்க்கைத்துணை என்பதை தேவன் நிச்சியத்திருக்கிறார்.
அப்படியென்றால் ஏன் தேவன் தீர்மானிக்கிற திருமணங்கள் இன்று ' டைவர்ஸ்' வரை செல்கிறது ? இதனை வேதம் ஏற்றுக் கொள்கிறதா??

1. தேவன் இணைத்ததை மனிதன் பிர்க்காதிருக்க கடவன் என்று மத்தேயு 19:6 ல் இயேசு கூறுகின்றார். இதன் மூலம் கணவன் மனைவி பிரிவதை[ டைவர்ஸ் ] கர்த்தர் ஆட்சேபிக்கிறார் என்பது தெளிவாகிறது.

2. கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் விபசாரம் செய்தால் மாத்திரமே அவர்கள் பிரிதலை [டைவர்ஸ்] வேதம் ஏற்றுக்கொள்கிறது.



ஆனால் இன்று கணவன் - மனைவி பிரிவது மேற்சொன்ன காரியத்திற்காக மாத்திரம் அல்ல.
எங்களுக்குள் ' Compatablity ' இல்லை, இனியும் சேர்ந்து வாழ்வது அர்த்தமற்றது என்று எத்தைனையோ இளம் தம்பதியினர் டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல் ஏறுகின்றனர்.

தம்பதியரே, 'compatablity'[ஒத்து போகுதல்] என்பது கம்புயூட்டருக்கு பொருந்தும் ஒரு வார்த்தை, தம்பதியருக்கு நடுவே 'Adjustablity'[அனுசரித்து போகுதல்] இருக்க வேண்டும்.

நம் பெற்றொருடன் நமக்கு கருத்து வேறுபாடுகள், ரசனை வேறுபாடுகள், தலைமுறை வித்தியாசங்கள் [ generation gap] என்று எத்தனை தான் ' incompatible'[ஒத்துப் போகாத]காரியங்கள் இருந்தாலும் நாம் அவர்களிடமிருந்து பிரிந்தா சென்று விடுகிறோம்?

திருமணத்தில் மட்டும் ' டைவர்ஸ்' என்ற ஒரு வழிமுறை இருப்பதால் நம் திருமணங்கள் அனுசரித்து வாழுதல், புரிந்துக் கொள்ள முயற்ச்சித்தல் என்று எதற்க்கும் இடம் தராமல் ' டைவர்ஸ்' செய்ய விரைகிறதோ??


'என் பிரியமே! நீ பூரண ரூபவதி;

உன்னில் பழுதொன்றுமில்லை,

நீ என்னுடையவள்!'


என்று ஒரு கணவன் மனைவியை

தன் நேசத்தால் நெகிழவைத்தால்.......



'அவர் முற்றிலும் அழகுள்ளவர்,

இவரே என் நேசர்;

என் நேசர் என்னுடயவர்,

நான் என் நேசருடையவள்;'


என்று ஒரு மனைவி கணவனிடம்

தன் பாசத்தை பொழிந்தால்.........


டைவர்ஸ் என்ற வார்த்தை அகராதியிலிருந்து நீக்கப்படும் அல்லவா???