Tuesday, January 29, 2008

பொறுமை...



நாம் சுறுசுறுப்பின்றி சோம்பேறியாயிருக்கக் கூடாது:

அதே வேளையில் கடவுளுக்கு முந்திக்கொண்டும் ஓடக்கூடாது.

கடவுளோடு நடப்பதென்றால் அவரது வேகத்திலேயே அடியெடுத்து வைப்பதாகும். ஆத்திரப்பட்டு ஆண்டவர் எதையும் செய்துவிடுபவரல்ல:

ஏனெனில் யாவும் தமது ஆளுகைக்குள்ளேயே இருக்கிறதென்று அவருக்குத் தெரியும்.

இவ்வுண்மையை நாம் நம்பினால் நாமும் பதறமாட்டோம்.

கடவுளின் தாமதங்கள் மறுப்புகளல்ல. அவர் எல்லாவற்றையும் அழகாக அதினதின் காலங்களில் செய்கிறவர்.

பொறுயின்மையினால் உண்டாகும் பாதிப்புகளை சரிசெய்வது அரிது. கடவுள் நமக்கென்று நியமிக்கும் குறிகளை எட்ட குறுக்குவழியே கிடையாது.

சரியான பாதை நீண்டதாகவும் நொடிகள் நிறைந்ததாகவும் இருக்கலாம்:

ஆனால் அதில்தான் கடவுள் நம்மை வளர்ப்பித்து முதிர்ச்சியடையச் செய்கிறார்.

பொறுமையே பூரணம்:

அதுவே நற்குனங்களின் நாயகி:

கடவுள் நம்மிடம் பொறுமையாயிருப்பது போலவே நாமும் எல்லாரிடமும் பொறுமையாயிருக்க வேண்டும்.