Tuesday, November 27, 2007

கடவுளுக்குக் கடன்!


"வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு;
அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு" (நீதி 11:24)

யாருக்கு கொடுக்கவேண்டும்?
தேவையிலுள்ள எவருக்கும் உதவ வேண்டும். தீயோர் மீதும் நல்லோர் மீதும் தமது சூரியனை உதிக்கப்பண்ணும், நீதியுள்ளோர்மீதும் அநீதியுள்ளொர் மீதும் மழையை பொழிபவர் நமது இயேசு அப்பா! [ மத் 5:45]

எவ்வளவு கொடுக்க வேண்டும்?
வேதத்தில் இதற்குச் சட்டமில்லை. ஆனால் "உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் கடவுள் பிரியமாயிருக்கிறார்: என்றிருக்கிறது
[ 2 கொரி 9:7 ].
இவ்வசனம் எளியவருக்கு உதவுதலியே அடுத்தது.

பிச்சைக்காரர், ஊனமுற்றோர் போன்றொரை அழைத்து அவர்களுக்கு உணவுடை கொடுத்து " எளியோர் பண்டிகை" ஒன்று நாம் கொண்டாடினால் என்ன? எவ்வளவு குதுகலமாயிருக்கும்! வருகிற கிறிஸ்துமஸை அப்படிக் கொண்டாடுங்களேன்!

எளியவருக்கு அள்ளிக் கொடுப்போர் மீது வரும் ஆசீர்வாதங்கள் ஏராளம். அவர்களுக்கு ' பொருளாதார' ஆசீர்வாதம் உண்டு. " ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்: அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" [ நீதி 19:17]

அப்படியே "உடலுக்கடுத்த" ஆசீர்வாதமும் உண்டு. பசியுள்ளோரோடு உங்கள் அப்பத்தைப் பகிர்ந்து ஆடையில்லாதோரை உடுத்துவிக்கும்போது உங்கள் ' சுகவாழ்வு துளிர்க்கும்" [ ஏசா 58:8]

" ஆன்மீக" ஆசீர்வாதமும் உண்டு, " ஏழைக்களுக்கு கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்" [ 2 கொரி 9:9,10]. எளியவரோடு ஈடுபாடு கொள்ளும்போது நமது ஆவியும் எளிமையாகிறது.

இறுதியாக, "நித்திய" ஆசீர்வாதம். நற்செயல்களில் செல்வந்தராகவும், தாராளாமாய்க் கொடுக்கிறவர்களாகவும் இருக்கையில் "நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி.....நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறோம்"
[ 1 தீமோ 6:18, 19]

Tuesday, November 13, 2007

மேன்மைக்கு முன்னானது தாழ்மை!



உலகில் பலருக்கும் தாங்கள் மற்றவர்களைவிடல் பெரியவர்களாக - முக்கியமாணவர்களாக-தலைவர்களாக-உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவா உண்டு. இயேசுவின் சீடர்களும் இதற்கு விதிவிலகல்ல. ஒருமுறை அவர்களில் எவன் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.[லூக்கா 22:24]


இயேசு அவர்களிடம் ," உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கட்டும்" என்றார் [லூக்கா 22:26]சிலுவையின் மரணம் வரை தம்மைத்தாமே தாழ்த்தினவரல்லவா நம் இயேசு?[பிலி 2:8] நாமும் கனம்பண்ணுகிறதிலே ஒருவருகொருவர் முந்திக்கொண்டு, மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் பெரியவர்களாக எண்ணுவோம் [ரோ 12:10;பிலி 2:3] எந்த வேலையும் நமது தகுதிக்கு குறைந்தது என்று எண்ணக்கூடாது. நமதாண்டவர் தம் சீடர்களின் கால்களையே கழுவித் துடைத்தாரல்லவா?[யோ 13:5]


இன்னும் அநேகருக்கு தங்களுடைய கல்வி, செல்வாக்கு, தோற்றம், சபைப்பிரிவு மற்றும் சாதி முதிலியவற்றைப்பற்றியெல்லாம் பெருமை." மனிதருக்குள்ளெ மேன்மையாக எண்ணப்படுவது கடவுளுக்கு முன்பாக அருவருப்பு [லூக்கா 16:15 இ]. நாம் இறக்கும்போது இவை எதுவும் நம்மோடுகூட வருவதில்லை. இவ்வுலக மேன்மையெல்லாம் குப்பை.இதையறிந்த பவுல் ," கிறிஸ்த்துவுக்காய் நான் எல்லாவற்றையும் இழப்பென்று விட்டேன்; குப்பையென்றே எண்ணுகிறேன்" என்றார் [ பிலி 3.11]


தூய்மையாய் வாழ்வதும் தங்கள் சாமர்த்தியமென எண்ணிக்கொண்டிருப்போரும் உண்டு. தன் பக்தியைக் குறித்து தம்பட்டம் அடித்துகொண்ட பரிசேயனின் ஜெபத்தை கர்த்தர் புறகணித்தார்.


நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கட்டும் [1 கொரி 10:12]
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது [ மத் 5:3]
மேனமைக்கு முன்னானது தாழ்மை[ நீதி 15:33 ஆ]


{ ஆர்.ஸ்டான்லி அவர்களின் 'நாளொரு மேனி என்ற தின தியான பகுதியிலிருந்து எழுதியது}

Sunday, November 4, 2007

Tamil Christian Song - Poorana Azhagullavar

என்னை கவர்ந்த பாடல் வரிகள், காட்சி அமைப்பு, பார்த்து ரசியுங்கள்!!