Sunday, December 30, 2007

புது வருட தீர்மானங்கள் !



புத்தாண்டு அல்லது பிறந்தநாள் தீர்மானங்கள் எடுக்காதவர் எவருமிலர் எனலாம். ஆனால், தோல்வி மேல் தோல்வி வரும்போது, வருந்தி இவ்விதத் தீர்மனங்கள் எடுப்பதில் அர்த்தமில்லையென நாளடைவில் முடிவுகட்டிவிடுகிற்றோம்.

இவ்வாண்டின்[2007] துவக்கத்தில் எடுத்த தீர்மானங்களை நினைத்துப்பார்த்தால் ஒருவேளை இவ்வித சோர்புகள் நமக்கு வரலாம்.

நல்ல தீர்மனங்கள் எடுக்க 'விருப்பமும்',
அதனை நடைமுறைப்படுத்த 'ஆற்றலும்' ,
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவராலேயே வருகின்றன. (பிலி-2:13).

கர்த்தரின் கரம் நமக்கு பின்னாலிருந்து செயல்படுகிறது. நல்ல தீர்மானங்களினால் நல்ல வளர்ச்சி உண்டாகும். இலக்கை சரியாகக் குறிக்கவும், மனச்சிதறல்களை தவிர்க்கவும் தீர்மாங்கள் உதவுகின்றன.

நமது தீர்மானங்கள் பலவற்றை கைக்கொள்ள முடியவில்லையே என் வரும் ஏக்கமும், அதைத் தொடர்ந்து வரும் குற்றவுணர்வும் நாம் திரும்பவும் முயற்ச்சிப்பதை தடை செய்கின்றன. ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குத் தோல்வி என்பது முடிவு அல்ல.நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் (சங் 37:23,24) (நீதி 24:16).

இருப்பினும் கீழ்கானும் யோசனைகள் நமக்கு உதவுமென நினைக்கிறேன்.....

*தீர்மானங்களில் பேராசை கூடவே கூடாது.
உதாரணமாக, நீங்கள் ஜெபத்தில் குறைவுள்ளவராக இருந்தால், இனி தினமும் 2 மணி நேரம் ஜெபிப்பேன் எனத் தீர்மானித்து விடாதீர்கள்.

அதற்க்கு பதிலாக, 15 நிமிடம் தினமும் ஜெபிபேன் என ஆரம்பியுங்கள்.
அதில் உறுதியாக இருந்து, படிப்படியாக உயருங்கள்.
பெரிய காரியங்களின் துவக்கம் சிறியதே!![சக 4:10}

* ஒரேவேளையில் நிறைய தீர்மானங்களை எடுக்காதீர்கள்.
ஜனவரியில் மொத்தமாய் 12 தீர்மாங்கள் எடுப்பதற்க்கு பதில், ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தீர்மானமாக எடுத்து, அதை செயல் படுத்தலாம்.
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது
நடத்தல்; அது குதித்தல் அல்ல!!
அது படிக்கட்டு;லிப்ட் அல்ல!!

*உங்கள் நெருங்கிய ஜெபத்தோழனோடு அல்லது வாழ்க்கைதுணையோடு உங்கள் புது வருட தீர்மானங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். இவ்விதப் பொறுப்பான மேற்பார்வ்வை உங்களுக்கு பயனளிக்கும்.

*ஆனால் தனிப்பட்ட தீர்மாங்களை பிறருக்குச் சொல்ல வேண்டாம்.
தீர்மானங்கள் பொருத்தனைகள் அல்ல.
உங்கள் இருதயத்தின் விருப்பங்களை கடவுளிடம் கூறிவிட்டு, அவற்றின் நிறைவேறுதலுக்காக அவரைநம்பியிருங்கள்.{சங் 37:5]