Tuesday, October 23, 2007

சண்டே க்ளாஸ் !!!




நான் சிறு வயதாயிருந்த போது, நாங்கள் செல்லும் ஆலயத்தில் ஞாயிறு ஆராதனை முடிந்தபின் சிறுவர்களுக்கு ' ஞாயிறு பாடசாலை' [Sunday Class] நடை பெறும். " சண்டே க்ளாஸ் போய்ட்டு வீட்டுக்கு வா" என்று என் அப்பா அம்மா வலியுறுத்துவார்கள். ஆனால் நானோ "சர்ச் சர்வீஸ் முடிவதற்க்கே 11 மணி ஆகிவிடுகிறது, அதன் பின் சண்டே க்ளாஸ் போய்ட்டு நான் மட்டும் தனியா வீட்டுக்கு வரனும், அதனால் நான் சண்டே க்ளாஸ் போகமாட்டேன்" என்று அடம்பிடித்து ஒவ்வொரு வாரமும் டிமிக்கி கொடுத்து விடுவேன்.

தற்பொதெல்லாம் ஆலய ஆராதனை நடைபெறும் அதேவேளையில் சண்டேக்ளாஸும் நடை பெறுகிறது. நான் சென்ற ஆலயத்திலும் அந்த முறை இருந்திருந்தால் நானும் ஒழுங்காக சண்டேக்ளாஸ் சென்றிருப்பேனோ?

அன்று ஒழுங்காக சண்டே க்ளாஸ் போகததை நினைத்து இன்று வருந்துகிறேன், இப்போது எங்கள் சர்ச்சில் சண்டே க்ளாஸ் ஆசிரியராக க்ளாஸ் எடுக்க அவ்வப்போது போவதுண்டு, அப்போதெல்லாம் அங்கே குழந்தைகள் மனப்பாட வசனம் சொல்லும் போதும், பாடல்களை செய்கையுடன் பாடும் போதும், " நாம் ஏன் இப்படி பட்ட ஒரு தருனத்தை நம் சிறு வயதில் தவற விட்டோம்" என என் மனம் வேதனைப் படும்.

பெற்றோரே, உங்கள் குழந்தைகளை தவறாமல் சண்டே க்ளாஸ் அனுப்புங்கள். அவர்களது இரட்ச்சிப்பிற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதுவே முதல்படி, அஸ்திபாரம், ஆணிவேர்!!!!