24 மணி நேர தமிழ் கிறிஸ்த்துவ FM ரேடியோ
இன்டெர்நெட்டில் தமிழ் கிறிஸ்த்துவ பாடல்கள் கேட்டு மகிழ
துதி FM <- click this link!!!
இன்டெர்நெட்டில் தமிழ் கிறிஸ்த்துவ பாடல்கள் கேட்டு மகிழ
துதி FM <- click this link!!!
Posted by Ammu at 11:54 AM 1 comments

நான் சிறு வயதாயிருந்த போது, நாங்கள் செல்லும் ஆலயத்தில் ஞாயிறு ஆராதனை முடிந்தபின் சிறுவர்களுக்கு ' ஞாயிறு பாடசாலை' [Sunday Class] நடை பெறும். " சண்டே க்ளாஸ் போய்ட்டு வீட்டுக்கு வா" என்று என் அப்பா அம்மா வலியுறுத்துவார்கள். ஆனால் நானோ "சர்ச் சர்வீஸ் முடிவதற்க்கே 11 மணி ஆகிவிடுகிறது, அதன் பின் சண்டே க்ளாஸ் போய்ட்டு நான் மட்டும் தனியா வீட்டுக்கு வரனும், அதனால் நான் சண்டே க்ளாஸ் போகமாட்டேன்" என்று அடம்பிடித்து ஒவ்வொரு வாரமும் டிமிக்கி கொடுத்து விடுவேன்.
தற்பொதெல்லாம் ஆலய ஆராதனை நடைபெறும் அதேவேளையில் சண்டேக்ளாஸும் நடை பெறுகிறது. நான் சென்ற ஆலயத்திலும் அந்த முறை இருந்திருந்தால் நானும் ஒழுங்காக சண்டேக்ளாஸ் சென்றிருப்பேனோ?
அன்று ஒழுங்காக சண்டே க்ளாஸ் போகததை நினைத்து இன்று வருந்துகிறேன், இப்போது எங்கள் சர்ச்சில் சண்டே க்ளாஸ் ஆசிரியராக க்ளாஸ் எடுக்க அவ்வப்போது போவதுண்டு, அப்போதெல்லாம் அங்கே குழந்தைகள் மனப்பாட வசனம் சொல்லும் போதும், பாடல்களை செய்கையுடன் பாடும் போதும், " நாம் ஏன் இப்படி பட்ட ஒரு தருனத்தை நம் சிறு வயதில் தவற விட்டோம்" என என் மனம் வேதனைப் படும்.
பெற்றோரே, உங்கள் குழந்தைகளை தவறாமல் சண்டே க்ளாஸ் அனுப்புங்கள். அவர்களது இரட்ச்சிப்பிற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதுவே முதல்படி, அஸ்திபாரம், ஆணிவேர்!!!!
Posted by Ammu at 2:03 PM 1 comments

வேதாகமத்தில் நல்ல மாமியார் மருமகளுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அது நெகோமி - ரூத் தான்.
தன் கணவனை இழந்த பிறகும், தன் மாமியாரை விட்டு தன் பிறந்தகம் செல்லாமல் மாமியாரோடு ரூத் தங்கியது எத்தனை ஆச்சரியமானது, அற்புதமான அன்பு!!
ரூத்தைப் போன்று சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க வேண்டுமா?? இதோ சில முக்கியமான டிப்ஸ்.....
1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.
2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.
3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.
4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.
5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.
6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.
7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.
8.எல்லா தாய்மார்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.
Posted by Ammu at 5:02 PM 2 comments



Posted by Ammu at 10:46 AM 2 comments
'Eve teasing' போய் தற்போது 'Adam teasing' துளிர் விட ஆரம்பித்து விட்ட போதிலும், இந்த 'eve teasing' க்கு காரணம் விடலை பருவ இளைஞனின் பருவ கோளாறா? , அவனது துணிச்சலா? , அவனது வெறித்தனமான செயலா?, அவனது சோம்பேறிதனமான பொழுதுப்போக்கா?? என்று ஆராய்ந்துப் பார்க்கும் போது, இவை மட்டும் காரணமல்ல, பெண்களின் நடத்தையும், உடை அலங்காரமும் தான் என்று பெண்களே பலர் ஒத்துக் கொள்வர்.
ஒரு நிமிட பார்வையிலேயே ஹார்மோன்களின் உந்துதலினால் ஒரு ஆண் கிளிர்ச்சியடையும் போது, பெண்கள் தங்கள் அங்கங்களை வெளிப்படுத்தும்வண்ணம் உடை அணிவது சரியானதா???
வேதத்தில் இதற்கான ஆலோசனை என்ன என்றுப் பார்ப்போம்.
நீதிமொழிகள் 31: 25 ல் வேதம் சொல்கிறது குணசாலியான ஒரு பெண்ணின் உடை 'பலமும் அலங்காரமுமாயிருக்கிறது' என்று.
அலங்கரித்துக் கொள்வது தவறில்லை, ஆனால் அது மற்றவரின், குறிப்பாக ஆண்களை திசை திருப்ப கூடிய வண்ணம் இருத்தல் கூடாது.
இன்றைய பெண்களின் நவநாகரீக உடைகள் அணிவதில் அதிக கவணம் தேவை. இறுக்கமான t-shirt, low hip Jeans, deep neck tops, போடுவதை தவிறுங்கள் பெண்களே.
நம் பண்பாட்டு உடையான சேலையையும் அழகாக, அங்கங்கள் தெரியாவண்ணம் அணிய வேண்டும்.
பவுல் பெண்களின் அழியாத அலங்காரமாக ' சாந்தமும் அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்' என்று Iபேதுரு 3: 4 ல் குறிப்பிடுகிறார்.
இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து கல்லூரியில் படிப்பதும், உடன் சேர்ந்து அலுவலகத்தில் வேலை செய்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆண்களுடன் பழகுவதிலும் ஒரு பெண்ணுக்கு வரைமுறை தெரிந்திருப்பது அவசியம்.
கண்டிப்பா ஆண்களோட ஒரு லிமிட்டோட தான் பழகணும். இயற்கையாவே ஆப்போஸிட் செக்ஸ் கிட்ட இருக்கற அட்ராக்ஷன் என்ன தான் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும் கொஞ்சமாவது இருக்க தான் இருக்கும். ஒரு பெண் ஒரு பையனை காஷூவலா தொட்டாலும், அவனுக்கு அது சில உணர்ச்சிகளை தூண்டி விடலாம். அது மாதிரி ஒரு பையன் சாதாரணமா ஒரு பெண்ணை அழகா இருக்கான்னு சொன்னா கூட அவளுக்கு அது ஒரு மயக்கத்த தரலாம் .
அதனால் ஆண் பெண் நட்பிலும் கவணம் தேவை பெண்களே!
பொது இடங்களில் தேவையில்லாமல் உரக்க பேசுவது, சத்தமாக சிரிப்பது போன்றவற்றை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.
கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன்......
அத்தனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தன்னை காத்துக்கொள்ளும் பெண் நிச்சயம் பூவுலகிலும் விண்ணுலகிலும் புகழப்படுவாள்!!!

Posted by Ammu at 10:33 AM 3 comments
Posted by Ammu at 5:10 PM 0 comments
நான் ரசித்த பாடல்......பார்த்து ரசியுங்கள்!
Posted by Ammu at 5:01 PM 1 comments