Tuesday, November 13, 2007

மேன்மைக்கு முன்னானது தாழ்மை!



உலகில் பலருக்கும் தாங்கள் மற்றவர்களைவிடல் பெரியவர்களாக - முக்கியமாணவர்களாக-தலைவர்களாக-உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவா உண்டு. இயேசுவின் சீடர்களும் இதற்கு விதிவிலகல்ல. ஒருமுறை அவர்களில் எவன் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.[லூக்கா 22:24]


இயேசு அவர்களிடம் ," உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கட்டும்" என்றார் [லூக்கா 22:26]சிலுவையின் மரணம் வரை தம்மைத்தாமே தாழ்த்தினவரல்லவா நம் இயேசு?[பிலி 2:8] நாமும் கனம்பண்ணுகிறதிலே ஒருவருகொருவர் முந்திக்கொண்டு, மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் பெரியவர்களாக எண்ணுவோம் [ரோ 12:10;பிலி 2:3] எந்த வேலையும் நமது தகுதிக்கு குறைந்தது என்று எண்ணக்கூடாது. நமதாண்டவர் தம் சீடர்களின் கால்களையே கழுவித் துடைத்தாரல்லவா?[யோ 13:5]


இன்னும் அநேகருக்கு தங்களுடைய கல்வி, செல்வாக்கு, தோற்றம், சபைப்பிரிவு மற்றும் சாதி முதிலியவற்றைப்பற்றியெல்லாம் பெருமை." மனிதருக்குள்ளெ மேன்மையாக எண்ணப்படுவது கடவுளுக்கு முன்பாக அருவருப்பு [லூக்கா 16:15 இ]. நாம் இறக்கும்போது இவை எதுவும் நம்மோடுகூட வருவதில்லை. இவ்வுலக மேன்மையெல்லாம் குப்பை.இதையறிந்த பவுல் ," கிறிஸ்த்துவுக்காய் நான் எல்லாவற்றையும் இழப்பென்று விட்டேன்; குப்பையென்றே எண்ணுகிறேன்" என்றார் [ பிலி 3.11]


தூய்மையாய் வாழ்வதும் தங்கள் சாமர்த்தியமென எண்ணிக்கொண்டிருப்போரும் உண்டு. தன் பக்தியைக் குறித்து தம்பட்டம் அடித்துகொண்ட பரிசேயனின் ஜெபத்தை கர்த்தர் புறகணித்தார்.


நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கட்டும் [1 கொரி 10:12]
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது [ மத் 5:3]
மேனமைக்கு முன்னானது தாழ்மை[ நீதி 15:33 ஆ]


{ ஆர்.ஸ்டான்லி அவர்களின் 'நாளொரு மேனி என்ற தின தியான பகுதியிலிருந்து எழுதியது}

Sunday, November 4, 2007

Tamil Christian Song - Poorana Azhagullavar

என்னை கவர்ந்த பாடல் வரிகள், காட்சி அமைப்பு, பார்த்து ரசியுங்கள்!!

Monday, October 29, 2007

காலை ஜெபம்




கர்த்தர் கிருபையாக நமக்கு தரும் ஒவ்வொரு நாளிலும், அதிகாலையில் அந்த நாளுக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்த ஜெபத்தை ஜெபித்துப் பாருங்கள், எனக்கு ஆசீர்வாதமாக இம்மட்டும் இருக்கும் ஜெபம் இது...............



அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன்,
நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு எனனைத் தப்புவியும்;
உம்மை புகழிடமாகக் கொள்ளுகிறேன்.
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்;
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

ஆமேன்

Thursday, October 25, 2007

24 மணி நேர தமிழ் கிறிஸ்த்துவ FM ரேடியோ

இன்டெர்நெட்டில் தமிழ் கிறிஸ்த்துவ பாடல்கள் கேட்டு மகிழ

துதி FM <- click this link!!!

Tuesday, October 23, 2007

சண்டே க்ளாஸ் !!!




நான் சிறு வயதாயிருந்த போது, நாங்கள் செல்லும் ஆலயத்தில் ஞாயிறு ஆராதனை முடிந்தபின் சிறுவர்களுக்கு ' ஞாயிறு பாடசாலை' [Sunday Class] நடை பெறும். " சண்டே க்ளாஸ் போய்ட்டு வீட்டுக்கு வா" என்று என் அப்பா அம்மா வலியுறுத்துவார்கள். ஆனால் நானோ "சர்ச் சர்வீஸ் முடிவதற்க்கே 11 மணி ஆகிவிடுகிறது, அதன் பின் சண்டே க்ளாஸ் போய்ட்டு நான் மட்டும் தனியா வீட்டுக்கு வரனும், அதனால் நான் சண்டே க்ளாஸ் போகமாட்டேன்" என்று அடம்பிடித்து ஒவ்வொரு வாரமும் டிமிக்கி கொடுத்து விடுவேன்.

தற்பொதெல்லாம் ஆலய ஆராதனை நடைபெறும் அதேவேளையில் சண்டேக்ளாஸும் நடை பெறுகிறது. நான் சென்ற ஆலயத்திலும் அந்த முறை இருந்திருந்தால் நானும் ஒழுங்காக சண்டேக்ளாஸ் சென்றிருப்பேனோ?

அன்று ஒழுங்காக சண்டே க்ளாஸ் போகததை நினைத்து இன்று வருந்துகிறேன், இப்போது எங்கள் சர்ச்சில் சண்டே க்ளாஸ் ஆசிரியராக க்ளாஸ் எடுக்க அவ்வப்போது போவதுண்டு, அப்போதெல்லாம் அங்கே குழந்தைகள் மனப்பாட வசனம் சொல்லும் போதும், பாடல்களை செய்கையுடன் பாடும் போதும், " நாம் ஏன் இப்படி பட்ட ஒரு தருனத்தை நம் சிறு வயதில் தவற விட்டோம்" என என் மனம் வேதனைப் படும்.

பெற்றோரே, உங்கள் குழந்தைகளை தவறாமல் சண்டே க்ளாஸ் அனுப்புங்கள். அவர்களது இரட்ச்சிப்பிற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதுவே முதல்படி, அஸ்திபாரம், ஆணிவேர்!!!!

Sunday, October 14, 2007

மாமியார் மெச்சும் மருமகள்!!




வேதாகமத்தில் நல்ல மாமியார் மருமகளுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அது நெகோமி - ரூத் தான்.
தன் கணவனை இழந்த பிறகும், தன் மாமியாரை விட்டு தன் பிறந்தகம் செல்லாமல் மாமியாரோடு ரூத் தங்கியது எத்தனை ஆச்சரியமானது, அற்புதமான அன்பு!!
ரூத்தைப் போன்று சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க வேண்டுமா?? இதோ சில முக்கியமான டிப்ஸ்.....

1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.

2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.

3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.

4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.

6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.

7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.

8.எல்லா தாய்மார்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.

Wednesday, October 3, 2007

திருமணம் எங்கு நிச்சயக்கப்படுகிறது....




திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப் படுகிறது என கூறுவதை கேட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் என்னவெனில் ' இவனுக்கு இவள் வாழ்க்கைத்துணை என்பதை தேவன் நிச்சியத்திருக்கிறார்.
அப்படியென்றால் ஏன் தேவன் தீர்மானிக்கிற திருமணங்கள் இன்று ' டைவர்ஸ்' வரை செல்கிறது ? இதனை வேதம் ஏற்றுக் கொள்கிறதா??

1. தேவன் இணைத்ததை மனிதன் பிர்க்காதிருக்க கடவன் என்று மத்தேயு 19:6 ல் இயேசு கூறுகின்றார். இதன் மூலம் கணவன் மனைவி பிரிவதை[ டைவர்ஸ் ] கர்த்தர் ஆட்சேபிக்கிறார் என்பது தெளிவாகிறது.

2. கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் விபசாரம் செய்தால் மாத்திரமே அவர்கள் பிரிதலை [டைவர்ஸ்] வேதம் ஏற்றுக்கொள்கிறது.



ஆனால் இன்று கணவன் - மனைவி பிரிவது மேற்சொன்ன காரியத்திற்காக மாத்திரம் அல்ல.
எங்களுக்குள் ' Compatablity ' இல்லை, இனியும் சேர்ந்து வாழ்வது அர்த்தமற்றது என்று எத்தைனையோ இளம் தம்பதியினர் டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல் ஏறுகின்றனர்.

தம்பதியரே, 'compatablity'[ஒத்து போகுதல்] என்பது கம்புயூட்டருக்கு பொருந்தும் ஒரு வார்த்தை, தம்பதியருக்கு நடுவே 'Adjustablity'[அனுசரித்து போகுதல்] இருக்க வேண்டும்.

நம் பெற்றொருடன் நமக்கு கருத்து வேறுபாடுகள், ரசனை வேறுபாடுகள், தலைமுறை வித்தியாசங்கள் [ generation gap] என்று எத்தனை தான் ' incompatible'[ஒத்துப் போகாத]காரியங்கள் இருந்தாலும் நாம் அவர்களிடமிருந்து பிரிந்தா சென்று விடுகிறோம்?

திருமணத்தில் மட்டும் ' டைவர்ஸ்' என்ற ஒரு வழிமுறை இருப்பதால் நம் திருமணங்கள் அனுசரித்து வாழுதல், புரிந்துக் கொள்ள முயற்ச்சித்தல் என்று எதற்க்கும் இடம் தராமல் ' டைவர்ஸ்' செய்ய விரைகிறதோ??


'என் பிரியமே! நீ பூரண ரூபவதி;

உன்னில் பழுதொன்றுமில்லை,

நீ என்னுடையவள்!'


என்று ஒரு கணவன் மனைவியை

தன் நேசத்தால் நெகிழவைத்தால்.......



'அவர் முற்றிலும் அழகுள்ளவர்,

இவரே என் நேசர்;

என் நேசர் என்னுடயவர்,

நான் என் நேசருடையவள்;'


என்று ஒரு மனைவி கணவனிடம்

தன் பாசத்தை பொழிந்தால்.........


டைவர்ஸ் என்ற வார்த்தை அகராதியிலிருந்து நீக்கப்படும் அல்லவா???