Thursday, December 6, 2007

அதிகாரத்திற்க்கு கீழ்படிதல்!!!



அதிகாரிகளுக்கு கீழ்படிதல், கடவுளுக்கு கீழ்படிதலாம். நாட்டின்


சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.



இனி வருமானவரி செலுத்த தவறமாட்டோம்:
சுங்கவரி அதிகாரிகளை ஏய்க்கமாட்டோம்:
எவருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம்:
சாலை விதிகளை மீறமாட்டோம்:
இப்படி நாம் அனைவரும் உறுதிக்கொண்டால் உலகமே மாறிவிடுமே!



நாம்தான் உலகிற்கு உப்பு:
நமது உப்புத்தன்மை குறைந்துப்போனால் உலகம் கெட்டுப் பயனற்றுப்போகுமே.
நாம்தான் உலகிற்கு விளக்கு:
நமது பிரகாசம் மங்கிப்போனால் உலகம் இருண்டு படுகுழியில் இறங்குமே.(மத்:13,14)



நாட்டின் சட்டம் நற்செய்தியறிவிப்பைத் தடுத்தாலோ, இன்னொரு மதத்தை நம்மீது திணித்தாலோ அதற்குக் கீழ்படிய நாம் கடமைப்பட்டவ்ர்களல்ல (தானி 3:16)



நாம் வேலைசெய்யும் இடங்களிலுள்ள மேலதிகாரிகளுக்கும் முழுமனதோடு கீழ்ப்படியவேண்டும். " வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல,உங்கள் தலைவர்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடு கீழ்படிந்து , மனிதருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாய்ப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின் பணியாளராய் மனபூர்வமாய் கடவுளுடைய திருவுளத்தின்படிச் செய்யுங்கள்...மனிதருக்காக அல்ல, கடவுளுக்காகவே நல்மனதோடு வேலை செய்யுங்கள்" (எபே 6:5-8) நமது அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவது, கிறிஸ்துவைச் சேவிப்பதாம் (கொலோ 3:22-24)



மேலதிகாரிகளில் " நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல: முரட்டுக் குணமுள்ளவர்களுக்கும்" நாம் கீழ்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம் ( 1 பேது 2:18).



கடவுளுக்குக் கீழ்படிகிறேனென்று சொல்லியும் அதிகாரிகளுக்குக்
கீழ்ப்படியாதவன் வீணன்: கண்ணியம் அவனிடத்தில் இல்லை.

1 comments:

நவீன் ப்ரகாஷ் said...

//மனிதருக்காக அல்ல, கடவுளுக்காகவே நல்மனதோடு வேலை செய்யுங்கள்"//

சத்தியமான வார்த்தைகள் அம்மு !!!