Tuesday, February 5, 2008

சோதனைகள்...

சோதிக்கப்படுவது பாவமல்ல;சோதனையில் விழுவதே பாவம்.
சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும்போதெல்லாம் நாம் வலுவடைகிறோம்; அதற்கு தலையசைக்கும் போதெல்லாம் வலுவிழக்கிறோம்.
சோதனையை வெல்லவேண்டுமென்ற உள்ளான விருப்பமில்லையேல் வெற்றி சாத்தியமில்லை.
சோதனைகள் நாம் சற்றும் எதிர்பாராத நபரிடிமிருந்தோ, இடத்திலிருந்தோ, சற்றும் எதிர்பாராத நேரத்தில் நம்மைத் தாக்கலாம்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்தில் எனக்குச் சோதனையே வராது என்று எவரும் சொல்லமுடியாது. எந்தப் பாவதிற்கு விரோதமாக மிகத் தீவிரமாய்ப் பிரசங்கித்தீர்களோ அந்தப் பாவத்தைச் செய்வதற்க்குதான் உங்களுக்கு திரும்ப திரும்ப சோதனை வரும்.
மற்றவர்களை எந்தக் காரியத்தில் திடப்படுத்தினீர்களோ அதில்தான் நீங்கள் அசைக்கப்படுவீர்கள்.
தினமும் கடவுளது உதவி நாடி, கவனமாய் நடந்துக்கொள்ளுங்கள்!!!

1 comments:

திவ்யப்ரகாஷ் said...

சோதனைகளை எப்படி வெல்வது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் அம்மு...