Tuesday, January 29, 2008
Sunday, January 13, 2008
கலப்புத் திருமணம்
அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை.
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள்" ( கல 3:28 )
இன்று பல கலப்புத் திருமணங்கள் நம் நாட்டில் நடைபெறுகின்றன. இதைத் தீவரமாய் ஆதரிக்கும் பலருண்டு: அதே போல் எதிர்க்கும் பழமைவாதிகளும் உண்டு பைபிளில் இதற்குப் பதிலுண்டா?
நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ வேதாகமம் ஒருபோதும் மாற்றுக்கலாச்சாரத் திருமணங்களுக்கு எதிராய்ப் பேசுகிறதில்லை.
விசுவாசிகள் அவிசுவாசிகளை மணப்பதை மட்டுமே அது எதிர்க்கிறது ( 2 கொரி 6:14,15 ).
ஈசாக்குக்குக் கானானியரிடத்தில் பெண்கொள்ள வேண்டாமென ஆபிரகாம் கூறியது மாற்றுக்கலாச்சாரத் திருமணத்திற்கு எதிர்ப்பாயல்ல: தன்னை எந்நாட்டிலிருந்து கடவுள் வேறுபிரித்தாரோ, அந்நாட்டிற்குத் தனது மகன் திரும்பச் செல்லக்கூடாது என்பதற்காகவே.
கலப்பு மணம் செய்த மோசேக்கு எதிராய்ப் பேசிய மிரியாம்மீது கடவுள் சினங்கொண்டார் ( எண் 12:1,9 ).
யோசேப்பின் மனைவி எபிரெயப் பெண்ணல்ல ( ஆதி 41:45 ).
வேற்று நாட்டவரை மணமுடித்தால் பிள்ளைகளுக்குத் தாங்கள் எதைச் சேர்ந்தவர்களென்று குழப்பம்!

வேற்று மொழியினரென்றால் பொதுவானதொரு மொழியில் இருவரும் தேர்ந்திரிந்தாலொழிய நெஞ்சோடு நெஞ்சு பேசமுடியாது!
ஆகவே இதில் நடைமுறை ஞானம் வேண்டும்.
எல்லா காரியங்களும் பொருத்தமாயிருந்து, இருவரும் விசிவாசிகளாய் இருக்கும் பட்சத்தில், சாதி வித்தியாசம் என்ற ஒரே காரணத்தால் பெண்ணையோ மாப்பிள்ளையையோ வேண்டாமென்று சொல்வது கடவுளுக்கு பிரியமாயிருக்காது.
Posted by Ammu at 7:36 PM 1 comments
Wednesday, January 2, 2008
நாளொரு மேனி !!!
"ஆண்டவரை தன் நம்பிக்கையாய்க் கொண்டிருப்பவன் தண்ணீர் அருகில் நடப்பதும், நீரோடை ஓரமாய் வேர்விடுகிறதும், வெட்பம் வருகிறதைக் காணாமல் இலை பசுமையாயிருக்கிறதும், மழை குறைவான வருடத்திலும் காய்ந்து போகாமல் தவறாது கனிகொடுக்கிறதுமான மரம்போல் இருப்பான்" (எரே 17:8)
உங்கள் ஆன்மீக வாழ்வில் நீங்கள் இன்னும் வளருவதற்கென்றே இவ்வாண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
இன்று உங்கள் வளர்ச்சிக்கு தடையாகவும் எதிராகவும் இருக்கும் நபர்கள் மற்றும் காரியங்களைப் பார்த்து ஆண்டவர் 'என் மக்களை வளரவிடு' என்று ஆணையிடுகிறார்.
கடவுள் உங்கள் பக்கம், எனவே வெற்றி உங்களுக்குத்தான்!
வேதத்தை தினமும் வாசியுங்கள்...
வாசிப்பதை சிந்தித்துப்பாருங்கள்....
விசுவாசத்துடன் கீழ்படியுங்கள்!!!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளருவீர்கள்!
WISH YOU A HAPPY NEW YEAR OF GROWTH AND FRUITFULNESS !
Posted by Ammu at 8:55 PM 2 comments
Sunday, December 30, 2007
புது வருட தீர்மானங்கள் !

புத்தாண்டு அல்லது பிறந்தநாள் தீர்மானங்கள் எடுக்காதவர் எவருமிலர் எனலாம். ஆனால், தோல்வி மேல் தோல்வி வரும்போது, வருந்தி இவ்விதத் தீர்மனங்கள் எடுப்பதில் அர்த்தமில்லையென நாளடைவில் முடிவுகட்டிவிடுகிற்றோம்.
இவ்வாண்டின்[2007] துவக்கத்தில் எடுத்த தீர்மானங்களை நினைத்துப்பார்த்தால் ஒருவேளை இவ்வித சோர்புகள் நமக்கு வரலாம்.
நல்ல தீர்மனங்கள் எடுக்க 'விருப்பமும்',
அதனை நடைமுறைப்படுத்த 'ஆற்றலும்' ,
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவராலேயே வருகின்றன. (பிலி-2:13).
கர்த்தரின் கரம் நமக்கு பின்னாலிருந்து செயல்படுகிறது. நல்ல தீர்மானங்களினால் நல்ல வளர்ச்சி உண்டாகும். இலக்கை சரியாகக் குறிக்கவும், மனச்சிதறல்களை தவிர்க்கவும் தீர்மாங்கள் உதவுகின்றன.
நமது தீர்மானங்கள் பலவற்றை கைக்கொள்ள முடியவில்லையே என் வரும் ஏக்கமும், அதைத் தொடர்ந்து வரும் குற்றவுணர்வும் நாம் திரும்பவும் முயற்ச்சிப்பதை தடை செய்கின்றன. ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குத் தோல்வி என்பது முடிவு அல்ல.நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் (சங் 37:23,24) (நீதி 24:16).
இருப்பினும் கீழ்கானும் யோசனைகள் நமக்கு உதவுமென நினைக்கிறேன்.....
*தீர்மானங்களில் பேராசை கூடவே கூடாது.
உதாரணமாக, நீங்கள் ஜெபத்தில் குறைவுள்ளவராக இருந்தால், இனி தினமும் 2 மணி நேரம் ஜெபிப்பேன் எனத் தீர்மானித்து விடாதீர்கள்.
அதற்க்கு பதிலாக, 15 நிமிடம் தினமும் ஜெபிபேன் என ஆரம்பியுங்கள்.
அதில் உறுதியாக இருந்து, படிப்படியாக உயருங்கள்.
பெரிய காரியங்களின் துவக்கம் சிறியதே!![சக 4:10}
* ஒரேவேளையில் நிறைய தீர்மானங்களை எடுக்காதீர்கள்.
ஜனவரியில் மொத்தமாய் 12 தீர்மாங்கள் எடுப்பதற்க்கு பதில், ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தீர்மானமாக எடுத்து, அதை செயல் படுத்தலாம்.
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது
நடத்தல்; அது குதித்தல் அல்ல!!
அது படிக்கட்டு;லிப்ட் அல்ல!!
*உங்கள் நெருங்கிய ஜெபத்தோழனோடு அல்லது வாழ்க்கைதுணையோடு உங்கள் புது வருட தீர்மானங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். இவ்விதப் பொறுப்பான மேற்பார்வ்வை உங்களுக்கு பயனளிக்கும்.
*ஆனால் தனிப்பட்ட தீர்மாங்களை பிறருக்குச் சொல்ல வேண்டாம்.
தீர்மானங்கள் பொருத்தனைகள் அல்ல.
உங்கள் இருதயத்தின் விருப்பங்களை கடவுளிடம் கூறிவிட்டு, அவற்றின் நிறைவேறுதலுக்காக அவரைநம்பியிருங்கள்.{சங் 37:5]
Posted by Ammu at 7:24 PM 3 comments
Wednesday, December 12, 2007
புகை ஒரு பகை
"புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றுகிறேன்" என்போர் சிலர். சுருள் சுருளாய் புகைவிட்ட பலர் வாழ்நாளின் இறுதியில் சுருண்டு படுத்துக்கிடப்பது வாழ்க்கையின் வாடிக்கை...
இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பீடி, சிகரெட் கிடையாது.ஆகவே வேதத்தில் புகைப்பழக்கத்தைப் பற்றி நேரிடியான போதனை இல்லை. எனினும் பொது அறிவின்படி பார்த்தாலும், எல்லா சிகரெட் பெட்டிகளிலும், கீழ்கண்ட வாசகம் உண்டு:
Statutory warning: Smoking is injurious to health.
புகைப்பிடிப்போர் பெரும்பாலும் ஒருவித அடிமைத்தனத்துக்குள்தான் இருப்பார்கள்(யோ 8:34).ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குரிய உயரிய கோட்பாட்டை திருமறையில் இப்படி வாசிக்கிறோம்:"எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு,ஆனாலும் எல்லாம் தகுதியாய் இருக்காது; எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு, ஆனாலும் நான் எதற்கும் அடிமைப்படமாட்டேன்" (1 கொரி 6:12). தீதாய் தோன்றும் எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள் என்றும் திருமறை போதிக்கிறது. புகை நமக்கு பகை!
பலர் இன்று இப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். பிரச்சனைக்குத் தீர்வு இதோ:
"இயேசு உங்களை விடுதலையாக்கினால் உண்மையிலே நீங்கள் விடுதலையாவீர்கள்"(யோ 8:36)
தூயாதி தூயவரே, எங்களுக்கும் எங்களை சிற்றியிருப்போருக்கும்
தீமை விளைவிக்கும் எவ்விதப் பழக்கத்தையும்,
எங்களுக்கு எவ்வளவு பிரியமாயிருந்தாலும், விட்டு விலக சக்தி தாரும்!
Posted by Ammu at 9:15 AM 2 comments
Thursday, December 6, 2007
விசுவாசம்
நம்மிலுள்ள விசுவாசத்தை நாம் பகிர்ந்துக்கொள்ளும்படி கடவுள் விரும்புகிறார். அவ்வாறு பகிர்ந்துக்கொள்ளுதல் நமது விசிவாசத்தை பெருகச் செய்யும்."எவன் தன்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதி 11:25)
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்களின் விசுவாச பகிந்துக்கொள்ளுதலை பார்ப்போம்.
பர்னபா:
-------------
"அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலிம் நிறந்தவனுமாயிருந்தான்.அநேக மக்கள் ஆண்டவரிடம் சேர்க்கப்பட்டார்கள்" (அப் 11:24).
விசுவாசத்தில் வல்லவனாகிய பர்னபா தன் விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொண்டதின் மூலம் கணக்கற்ற மக்கள் விசுவாசத்தைப் பெற்றவர்களாய் திருச்சபையில் இணைய முடிந்தது.
பவுல்:
----------
விசுவாசத்தை பகிர்ந்துக்கொள்ள பேச்சுத்திறன் அவசியமில்லை. தெளிவாக எளிய நடையில் சொன்னால் போதும். அதிகம் படித்தவராயிருந்தாலும் பவுல் தனது அறிவிலும் திறமையிலும் ஒருநாளும் நம்பிக்கை வைக்கவில்லை. திருவசனத்தின் வல்லமையையே அவன் எப்பொழுதும் நம்பினான்.அதுவே அவரது வெற்றி நிறைந்த திருபணியின் இரகசியமாகும் (1 கொரி 2:1-5).
திமிர்வாதக்கரனின் நண்பர்கள்:
--------------------------------------------------------
"படுக்கையில் கிடந்த முடக்குவாதமுற்றவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர் அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, முடக்குவாதக்கரனை நோக்கி:"மகனே தைரியமாயிரு:உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன: என்றார்.(மத் 9:2)
நான்கு பேர் தங்கள் விசுவாசத்தைத் திமிர்வாதக்காரன் ஒருவனோடு பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் தங்கள் செயலில் அதைக் காட்டினர். இயேசு அவர்களது விசுவாசத்தைக்கண்டு மனம் மகிழ்ந்தார். அவர்கள் விசுவாசத்தில் இன்னும் வளரும்படி, திமிர்வாதக்கரனைச் சுகமக்கினார்.
அம்மா, பாட்டியின் விசுவாசம்:
-------------------------------------------------------
"அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்,உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்:(2 தீமோ 1:5).
இவை தீமொத்தேயுவிற்க்கு பவுல் எழுதியது. பெண்களை உற்ச்சாகமூட்டும் வசன்ம் இது! வெளியே போய் பிரசங்கிக்க முடியாவிட்டாலும், வீட்டில்தானே விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொள்ள வழியிருக்கிறதே! நாம் கடவுள் மீதுல்ள விசுவாசத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளபோது, அது கடவுளைக் கன்படுத்துகிறது: பகிந்துக்கொள்ளும் நபரைக் கடவுள் கன்ப்படுத்துகிறார். எனவேதான் வேதத்தில் தீமோத்தேயுவின் பாட்டி, மற்றும் தாயாரின் பெயரும் வந்துவிட்டது!
இறைக்க இறைக்க ஊறும் ஊற்று;
சொல்லச் சொல்ல வளரும் விசுவாசம்!
Posted by Ammu at 1:58 PM 1 comments
அதிகாரத்திற்க்கு கீழ்படிதல்!!!
அதிகாரிகளுக்கு கீழ்படிதல், கடவுளுக்கு கீழ்படிதலாம். நாட்டின்
இனி வருமானவரி செலுத்த தவறமாட்டோம்:
சுங்கவரி அதிகாரிகளை ஏய்க்கமாட்டோம்:
எவருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம்:
சாலை விதிகளை மீறமாட்டோம்:
இப்படி நாம் அனைவரும் உறுதிக்கொண்டால் உலகமே மாறிவிடுமே!
நாம்தான் உலகிற்கு உப்பு:
நமது உப்புத்தன்மை குறைந்துப்போனால் உலகம் கெட்டுப் பயனற்றுப்போகுமே.
நாம்தான் உலகிற்கு விளக்கு:
நமது பிரகாசம் மங்கிப்போனால் உலகம் இருண்டு படுகுழியில் இறங்குமே.(மத்:13,14)
நாட்டின் சட்டம் நற்செய்தியறிவிப்பைத் தடுத்தாலோ, இன்னொரு மதத்தை நம்மீது திணித்தாலோ அதற்குக் கீழ்படிய நாம் கடமைப்பட்டவ்ர்களல்ல (தானி 3:16)
நாம் வேலைசெய்யும் இடங்களிலுள்ள மேலதிகாரிகளுக்கும் முழுமனதோடு கீழ்ப்படியவேண்டும். " வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல,உங்கள் தலைவர்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடு கீழ்படிந்து , மனிதருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாய்ப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின் பணியாளராய் மனபூர்வமாய் கடவுளுடைய திருவுளத்தின்படிச் செய்யுங்கள்...மனிதருக்காக அல்ல, கடவுளுக்காகவே நல்மனதோடு வேலை செய்யுங்கள்" (எபே 6:5-8) நமது அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவது, கிறிஸ்துவைச் சேவிப்பதாம் (கொலோ 3:22-24)
மேலதிகாரிகளில் " நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல: முரட்டுக் குணமுள்ளவர்களுக்கும்" நாம் கீழ்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம் ( 1 பேது 2:18).
கடவுளுக்குக் கீழ்படிகிறேனென்று சொல்லியும் அதிகாரிகளுக்குக்
கீழ்ப்படியாதவன் வீணன்: கண்ணியம் அவனிடத்தில் இல்லை.
Posted by Ammu at 1:46 PM 1 comments





