Monday, September 24, 2007
Tamil Christian Songs - Hai Vol.1 - Enggum Olli
நான் ரசித்த பாடல்......பார்த்து ரசியுங்கள்!
Posted by Ammu at 5:01 PM 1 comments
இளமை, இனிமை, இறைவனுக்கே!
வாலிப பருவத்தில் இயற்க்கையாகவே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்கள் நடைபெறும் போது, மேற்சொல்லிய காரியங்கள் எளிதாக வாலிபர்களை தவறு செய்ய தள்ளிவிடுகிறது.
இதனை மேற்கொள்வது எப்படி?

ஆகாத சம்பாஷனை நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் கொள்க!
2.சோம்பேறிதனம் உங்களை எளிதில் பாவம் செய்ய தூண்டிவிடும், சோம்பேறியின் மூளையை சாத்தான் சீக்கிரமாக ஆக்கிரமித்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
'சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொள்ளும்' - நீதிமொழிகள் 21:25
இசைப் பயிற்ச்சி, விளையாட்டுப் பயிற்ச்சி போன்றவை உங்களை குதூகலத்துடனும், உற்ச்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.சோம்பேறித்தனம் தாவீது ராஜாவை எவ்வளவு பெரிய பாவம் செய்ய தூண்டியது பாருங்கள்![II சாமுவேல் 11.2-4]
3.நீங்கள் இன்டர்னெட்டில், தொலைக்காட்ச்சியில் பார்க்கும் காட்ச்சிகளை, இயேசப்பாவும் உங்களோடு சேர்ந்துப் பார்த்து ரசிப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சி உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிரானது அல்ல என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.
'தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன், வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.' - சங்கீதம் 101:3

ஒரு ஆபாச காட்ச்சியையோ, வன்முறை நிகழ்ச்சியையோ நிச்சயம் இயேசப்பா உங்களுடன் சேர்ந்து ரசிக்கமாட்டார் என்பது தெள்ளந்தெளிவாக உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா???
'வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பகட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட;
ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.' - பிரசங்கி 11:9
"அன்புள்ள இயேசப்பா! என் இளமையைக்குறித்து ஒருவனும் என்னை அசட்டைபண்ணாதபடிக்கு, என் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க கற்றுத்தாரும்"
ஆமேன்.
http://www.tamilchristiansongs.org/media/index.php?option=com_zina&Itemid=26&l=8&p=Fmpb_Songs/Rizia/Chumma.wma&m=1
Posted by Ammu at 11:41 AM 2 comments
Friday, September 21, 2007
என் அன்பு தந்தைக்குச் சமர்பணம்.
குழந்தை பருவத்தில்.....

கரம் பிடித்து நடக்க
பள்ளி பருவத்தில்.....
மிதிவண்டி ஓட்ட
இன்று..
உங்கள் இழப்பினை தாங்கும் மனவழிமையினை

Posted by Ammu at 2:27 PM 6 comments





